ஆப்நகரம்

கேரளாவை தொடர்ந்து கோவை 10ம் வகுப்பு மாணவி தற்கொலை..! ஆன்லைன் வகுப்பு தாக்கம்

கோவை அருகே ஆன்லைனில் பள்ளியில் கொடுக்கபட்ட வீட்டுப்பாடத்தை படிக்காமல் இருந்த மகளை பெற்றோர்கள் திட்டியதால் பத்தாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்...

Samayam Tamil 22 Jun 2020, 7:36 pm
கொரோனா பொதுமுடக்கத்தால் இந்த கல்வியாண்டில் திறக்கப்படவேண்டிய பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையாக பாடங்களை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தியதையடுத்து அந்தந்த மாநிலங்களில் தொலைக்காட்சி, வீடியோ கால் மூலமாக ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
Samayam Tamil 10ம் வகுப்பு மாணவி தற்கொலை


இந்த நடைமுறை பல பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருந்தாலும் சில பேருக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்விளைவாக, கேரள மாநிலம் மலபுரத்தைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவியின் வீட்டில் டிவி இல்லாததால், ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள முடியாமல் தீ குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாக, கோவையில் தற்போது நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.
கோவை பாப்பநாயக்கன் பாளையம் என்ஜி ராமசாமி வீதியை சேர்ந்தவர் நாராயணன். இவரது 16 வயது மகள் கனிஷ்கா, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முடித்துவிட்டு பத்தாம் வகுப்புக்கான பாடங்களை ஆன்லைன் வகுப்பில் படித்து வருகிறார்.

செய்தி சேனலுக்கு மிரட்டல்..! தனிமையில் இருந்த ரவுடி பேபி தற்கொலை முயற்சி..!

அதற்கான பாடக்குறிப்புகள் பள்ளியிலிருந்து வாட்ஸப்பில் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அதனை கனிஷ்கா கண்டுகொள்ளாமல் எப்பொழுதும் டிவியை பார்த்துக் கொண்டிருந்ததாக கூறபடுகிறது. இந்நிலையில் அவரது பெற்றோர் அவரை. படிக்குமாறு அறிவுரை கூறியதுடன் கண்டிக்கவும் செய்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த மாணவி, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக பந்தயசாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி