ஆப்நகரம்

தமிழத்தில் இன்று டெங்கு காய்ச்சலுக்கு 11 பேர் பலி!!

தமிழகத்தில் இன்று காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு 11 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 19 Oct 2017, 5:15 pm
தமிழகத்தில் இன்று காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு 11 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil 11 people have died for dengue in tamil nadu on 19th october
தமிழத்தில் இன்று டெங்கு காய்ச்சலுக்கு 11 பேர் பலி!!


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தண்டாரம்பட்டியை சேர்ந்த வந்திதேவன், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கொல்லம்பட்டியை சேர்ந்த முனியம்மா, விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகேயுள்ள கருணாபுரத்தில் ப்ரீத்தி, கோவை அரசு மருத்துவமனையில் அன்னூரை சேர்ந்த 6 வயது சிறுமி விஷ்மிதா, காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே தனியார் கல்லூரியை சேர்ந்த தமிழரசன், சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொளத்தூரை சேர்ந்த ஜெகதீசன், மதுரை மாவட்டம் தேனூர் புதுக்காலனியை சேர்ந்த முனியாண்டி, ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தை சேர்ந்த ஜமால் முகைதீன், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள வி நகரில் தனியார் பள்ளியில் படிக்கும் 5ம் வகுப்பு மாணவன் விஷ்ணு பிரகாஷ் ஆகியோர் பலியாகி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலின் வீரியம் இன்னும் குறையாத நிலையில், ஒவ்வொருவரும் தங்களது வீட்டைச் சுற்றிலும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. விழிப்புணர்வே டெங்கு காய்ச்சலை குறைக்க வழி வகுக்கும்.

அடுத்த செய்தி