ஆப்நகரம்

11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

11 வயது மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளது.

Samayam Tamil 19 Jul 2018, 10:57 am
சென்னை: 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளது.
Samayam Tamil 5


சென்னையில் 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமியின் தாய் கொடுத்த புகாரால் காவல்துறையினர், நடவடிக்கை எடுத்தனர்.

இந்த சம்பவத்தில் சுமார் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வரும் 31ம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் முக்கிய‌ குற்றவாளி ரவிகுமாரை விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வாங்கித்தர போலீசார் தீவிரம் காட்டிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த வழக்கில் ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்காக சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை, சிரிஞ்சுகள், குளிர்பான பாட்டில்கள் ஆய்வுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

11 year old girl sexual abuse case : police plan to file charge sheet within a month

அடுத்த செய்தி