ஆப்நகரம்

சுஜித் மரண எதிரொலி: கடந்த 3 நாட்களில் மூடப்பட்ட 1,100 ஆழ்துளைக் கிணறுகள்

சுஜித் வில்சன் சம்பவத்துக்குப் பிறகு திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் 1,100 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளன.

Samayam Tamil 29 Oct 2019, 4:18 pm
சிறுவன் சுஜித்தின் மரணம் பல்வேறு தொடர்வினைகளை நிகழ்த்தி வருகிறது. மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகள் எல்லாம் மூடப்பட வேண்டும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். தொடர்ந்து முடப்படாத ஆழுதுளை/ குழாய் கிணறுகள் குறித்த புகார்களை முதலமைச்சரின் நேரடி புகார் பதிவு செய்யும் தளத்தில் பதிவு செய்யலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.
Samayam Tamil 1100 bore wells closed in 3 days in thiruvallur districe
சுஜித் மரண எதிரொலி: கடந்த 3 நாட்களில் மூடப்பட்ட 1,100 ஆழ்துளைக் கிணறுகள்


இந்நிலையில், நேற்றைய தினம் இரவு (29.10.19) சிறுவன் இறந்துபோனதாக அறிவிக்கப்பட்டு, அதிகாலையில் உடல் மீட்கப்பட்டு காலையில் புதூர் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பிறகு அந்த ஆழ்துளைக் கிணறு சிமெண்ட் கலவை நிரப்பட்டு மூடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சிவராசுவின் நேரடி கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கை செய்து முடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இனி ஒரு மரணம் இதுபோல நிகழக்கூடாது என்றும், இதுவே கடைசியாக இருக்க வேண்டும் என்றும் அரசியல் தலைவர்கள் பலரும் அறிக்கை அளித்து வருகின்றனர். நாடெங்கும் இந்த நிகழ்வுக்குப் பிறகு மூடப்படாத ஆபத்தான குழிகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளை மூட அரசு தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதேபோல, திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் ஆயிரத்து 100 ஆழ்துளைக் கிணறுகள் அரசால் மூடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி இந்த தகவலை தெரிவித்துள்ளார். மேலும், அரசு விதிகளை மீறி அரசு/தனியார் நிலங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், புதியதாக ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதானால், நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்றே அடுத்தடுத்த நிகழ்வுகள் நடைபெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி