ஆப்நகரம்

தமிழகத்தில் ஒரே நாளில் 1,000 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

Samayam Tamil 31 May 2020, 6:54 pm
கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் வருகிற ஜூன் மாதம் 30ஆம் தேதி நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோ, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூட தளர்வுகளுடன் பொது முடக்கத்தை தமிழக அரசும் நீட்டித்துள்ளது. இருப்பினும், நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்னிக்கை அதிகரித்து வருவது கவலையளிக்கும் வகையில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு விவரங்கள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


அந்த வகையில், தமிழகத்தில் இன்று மட்டும் 1,149 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில், 92 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள், 3 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 21,184லிருந்து 22,333 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 பேர் இன்று மட்டும் உயிரிழந்துள்ளனர். . இதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை தமிழகத்தில் 173 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று மட்டும் 757 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 12,757 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையிலிருந்து வெளியூர் போறீங்களா? -அப்போ இதுக்கு தயாரா இருங்க!

அரசு பரிசோதனை மையங்கள், தனியார் பரிசோதனை மையங்கள் என மொத்தம் 72 ஆய்வகங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை 4,91,962 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 12,807 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அறிவிப்பு

சுகாதாரத்துறை அறிவிப்பு


சென்னையை பொறுத்தவரை இன்று மட்டும் 804 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,980லிருந்து 14,802 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி