ஆப்நகரம்

115 ஆண்டுகள் பழமையான விளையாட்டு அரங்கு இடித்து தரைமட்டம்!

திருச்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக 115 ஆண்டுகள் பழமையான விளையாட்டு அரங்கை இடித்து தரைமட்டமாக்கிய சம்பவம் விளையாட்டு வீரர்கள், பொதுமக்களை கவலையடைய செய்தது.

Samayam Tamil 18 May 2019, 2:01 pm
திருச்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக 115 ஆண்டுகள் பழமையான விளையாட்டு அரங்கை இடித்து தரைமட்டமாக்கிய சம்பவம் விளையாட்டு வீரர்கள், பொதுமக்களை கவலையடைய செய்தது.
Samayam Tamil 115 ஆண்டுகள் பழமையான விளையாட்டு அரங்கு இடித்து தடைமட்டம்!
115 ஆண்டுகள் பழமையான விளையாட்டு அரங்கு இடித்து தடைமட்டம்!


திருச்சி மலைக்கோட்டை பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடந்த 115 ஆண்டுகளாக நகர சங்கம் இயங்கி வந்தது. இந்த சங்க வளாகத்திற்குள் சதுரங்கம், டேபிள் டென்னிஸ், சிறகு பந்து, ஓவியம் போன்ற மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி அமைப்பதற்காக நகர சங்க கட்டிடங்களை இடிக்கப்போவதாக 16-ம் தேதி அறிவிக்கை அனுப்பி, இன்று அதிகாலை முதல் மாநகராட்சி அதிகாரிகள் கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நகர சங்க நிர்வாகிகள் மாற்று இடம் கேட்டும் மாவட்ட நிர்வாகம் கொடுக்காமல் அதிரடியாக கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கியது. தடுக்க முயன்ற நிர்வாகிகள் சங்க உறுப்பினர்கள் நூறு பேரை காவல்துறையினர் கைது செய்து, தனியார் மண்டபத்தில் வைத்தனர். இதனால் விளையாட்டு வீரர்களும் பொதுமக்களும் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி