ஆப்நகரம்

பொங்கல் பண்டிகைக்கு 11,993 சிறப்பு பேருந்துகள்: 9 ம் தேதி முன்பதிவு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் 11 ஆயிரத்து 993 பேருந்துகளுக்கான முன்பதிவு வருகிற 9ம் தேதி நடைபெறும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சா் விஜயபாஸ்கா் தொிவித்துள்ளாா்.

TOI Contributor 3 Jan 2018, 9:31 pm
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் 11 ஆயிரத்து 993 பேருந்துகளுக்கான முன்பதிவு வருகிற 9ம் தேதி நடைபெறும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சா் விஜயபாஸ்கா் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil 11993 special bus available in pongal festival
பொங்கல் பண்டிகைக்கு 11,993 சிறப்பு பேருந்துகள்: 9 ம் தேதி முன்பதிவு


பொங்கல் சிறப்பு பேருந்துகள் குறித்து போக்குவரத்து துறை அமைச்சா் விஜயபாஸ்கா் பல்லவன் இல்லத்தில் ஆலோசனையை முடித்துக் கொண்டு செய்தியாளா்களை சந்தித்தாா்.

அமைச்சா் கூறுகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 11, 12, 13ம் தேதிகளில் 11 ஆயிரத்து 993 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பொங்கல் பண்டிகைக்கு 6 லட்சம் போ் சென்னையில் இருந்து பிற ஊா்களுக்கு செல்வாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அவர்களது வசதிக்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு ஜனவரி 9ம் தேதி தொடங்குகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இதற்காக 29 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்படும். பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் எந்த பகுதிகளில் இருந்து இயக்கப்படும் என்பதையும் அமைச்சர் அறிவித்தார்.
அதன்படி, ஆந்திரா செல்லும் பேருந்துகள் அண்ணாநகர் பேருந்து நிலையத்தில் இருந்தும், கிருஷ்ணகிரி வழியாக செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்தும், விக்ரவாண்டி வழியாக இயக்கப்படும் பேருந்துகள் தாம்பரத்தில் இருந்தும், இசிஆர் வழியாக செல்லும் பேருந்துகள் சைதாப்பேட்டையில் இருந்தும் இயக்கப்படும்.

மற்ற ஊர்களுக்கு கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்று எம்.ஆர் விஜயபாஸ்கர் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்காக புதிய பேருந்துகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், மழை காலத்தில் தண்ணீர் கசியாதவாறு புதிய பேருந்துகள் வடிவமைக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

அடுத்த செய்தி