ஆப்நகரம்

11 ஆம் வகுப்பு பள்ளி சேர்க்கை, பள்ளிகள் ரெடி, நீங்க ரெடியா?

10ஆம் வகுப்பில் அனைவரும் பாசான நிலையில் தனியார்ப் பள்ளிகள் அடுத்தகட்ட நடவடிக்கை...

Samayam Tamil 11 Jun 2020, 1:26 pm
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த அவசரக் காலத்திலும் தேர்வு நடத்தியே ஆக வேண்டும் என அரசு நடத்திய போராட்டம் தீடிரென திரும்பப் பெறப்பட்டது.
Samayam Tamil 11 ஆம் வகுப்பு பள்ளி சேர்க்கை, பள்ளிகள் ரெடி, நீங்க ரெடியா?
11 ஆம் வகுப்பு பள்ளி சேர்க்கை, பள்ளிகள் ரெடி, நீங்க ரெடியா?


தெலங்கானாவில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற செய்தி வெளியானதையடுத்து, தமிழ்நாட்டிலும் மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி வழங்கி உத்தரவிட்டது மாநில அரசு.

இந்த உத்தரவின் காரணமாக மாநிலத்தில் 9 லட்சத்து 75 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர் எனத் தரவுகள் தெரிவிக்கின்றனர். தேர்ச்சி அடைந்த மாணவர்கள் மேற்படிப்பைத் தொடர திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் 11ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையை இப்போதே தொடங்க தனியார்ப் பள்ளிகள் ஆர்வம் காட்டி வருகிறது. சேர்க்கை குறித்து பல்வேறு பணிகளைப் பள்ளி அளவில் மேற்கொண்டு வரும் தனியார்ப் பள்ளிகள், விரைவில் அரசிடம் இதற்கான அனுமதி பெற அழுத்தம் கொடுத்து வரத் திட்டமிட்டுள்ளது.

ராயபுரம் குழந்தைகளுக்கு ஏன் இவ்வளவு கஷ்டம்? சுப்ரீம்கோர்ட் கிடுக்கிப்பிடி!

பெரும்பாலான மெட்ரிக்குலேசன் பள்ளிகள் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களைச் சேர்க்கலாமா எனத் திட்டமிட்டும் வருகிறதாம். இதுபோன்ற முறைகளுக்கும் அரசிடம் அனுமதி பெறப்படும் எனக் கூறப்படுகிறது.

இந்த பணிகள் ஒருபுறமிருந்தாலும், தேர்ச்சியடைந்த மாணவர்களைப் பள்ளிகள் தங்கள் பக்கம் இழுப்பதிலே அதிக ஆர்வம் காட்டி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி