தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியான நிலையில், அரசு பள்ளிகளில் பயின்ற 12 மாணவர்களுக்கு மட்டுமே, அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று(ஜூன்-29) வெளியிடப்பட்டது.இதில், அரசு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 1,320 மாணவ, மாணவிகள் இடம்பெற்றுள்ளனர். அந்த பட்டியலின் விவரம் பின்வருமாறு:
1 முதல் 1000 -4
1001 முதல் 3000 – 8
3001 முதல் 5000 – 16
5001 முதல் 10000 – 76
10001 முதல் 15000 – 157
15,001 முதல் 25,000 – 1,059
இந்நிலையில் இந்த பட்டியலில், முதல் 3000 இடங்களில் இடம்பெற்றுள்ள 12 பேருக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே நீட் தேர்வால் பல ஏழை, எளிய பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், தற்போது அரசுப்பள்ளிகளில் பயின்ற 12 மாணவர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் 1000க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இது மாணவர்கள் மத்தியிலும், கல்வியாளர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று(ஜூன்-29) வெளியிடப்பட்டது.இதில், அரசு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 1,320 மாணவ, மாணவிகள் இடம்பெற்றுள்ளனர். அந்த பட்டியலின் விவரம் பின்வருமாறு:
1 முதல் 1000 -4
1001 முதல் 3000 – 8
3001 முதல் 5000 – 16
5001 முதல் 10000 – 76
10001 முதல் 15000 – 157
15,001 முதல் 25,000 – 1,059
இந்நிலையில் இந்த பட்டியலில், முதல் 3000 இடங்களில் இடம்பெற்றுள்ள 12 பேருக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே நீட் தேர்வால் பல ஏழை, எளிய பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், தற்போது அரசுப்பள்ளிகளில் பயின்ற 12 மாணவர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் 1000க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இது மாணவர்கள் மத்தியிலும், கல்வியாளர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.