ஆப்நகரம்

12 தமிழக ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம்..!-தமிழக அரசு அதிரடி

தமிழகத்தைச் சேர்ந்த 12 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

TNN 2 Aug 2016, 8:34 pm
தமிழகத்தைச் சேர்ந்த 12 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil 12 ips officers transferred in tamilnadu
12 தமிழக ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம்..!-தமிழக அரசு அதிரடி

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ள விபரம் பின்வருமாறு:
கட்டாய காத்திருப்பு பட்டியலில் இருந்த திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்,சென்னை சட்டம் ஒழுங்கு உதவி காவல்துறை தலைவர்.
விடுமுறையில் இருந்த அரவிந்தன் ஐ.பி.எஸ்,தென்சென்னை போக்குவரத்து துணை ஆணையர்.
கட்டாய காத்திருப்பு பட்டியலில் இருந்த பாண்டியன் ஐ.பி.எஸ்,தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கண்காணிப்பாளர் .
கட்டாய காத்திருப்பு பட்டியலில் இருந்த சரவணன் ஐ.பி.எஸ், கோவை போக்குவரத்து காவல் துணை ஆணையர் .
கட்டாய காத்திருப்பு பட்டியலில் இருந்த ஐ.பி.எஸ் சிபி சக்கரவர்த்தி,ஈரோடு சிறப்பு அதிரடிபடை கண்காணிப்பாளர் .
கட்டாய காத்திருப்பு பட்டியலில் இருந்த ஜியா உல் ஹக் ஐ.பி.எஸ்,சேலம் அமலாக்கத்துறை காவல் கண்காணிப்பாளர் .
கட்டாய காத்திருப்பு பட்டியலில் இருந்த நிஷா பார்த்திபன் ஐ.பி.எஸ்,சென்னை அமலாக்கத்துறை காவல் கண்காணிப்பாளர் .
கட்டாய காத்திருப்பு பட்டியலில் இருந்த சரோஜ்குமார் தாக்கூர் ஐ.பி.எஸ், சென்னை மாநகர தெற்கு சரக லஞ்ச, ஊழல் தடுப்பு எஸ்.பி.
கட்டாய காத்திருப்பு பட்டியலில் இருந்த சசிமோகன் ஐ.பி.எஸ், சென்னை பெருநகர கிழக்கு போக்குவரத்து துணை ஆணையர். \
மதுரை டெபுடி கமிஷனராக இருந்த ராஜராஜன் ஐ.பி.எஸ்,விருதுநகர் மாவட்ட எஸ்பி.
சென்னை அமலாக்கப்பிரிவு சூப்பிரண்ட் மயில்வாகனன் ஐ.பி.எஸ்,திருவாரூர் மாவட்ட போலிஸ் சூப்பிரண்ட்
சென்னை கிரைம் பிரான்ச் சி.ஐ.டி சூப்பிரண்ட் லோகநாதன்,புதுக்கோட்டை மாவட்ட போலிஸ் சூப்பிரண்ட்
புதிய பணியிடம் வழங்கப்பட்ட 12 ஐ.பி.எஸ் அதிகாரிகளில் 8 பேர் கட்டாய காத்திருப்பு பட்டியலில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி