ஆப்நகரம்

12, 10 ஆம் வகுப்பு புத்தகங்கள் நாளை விநியோகம், எங்கு எப்படிப் பெறுவது?

கொரோனா காரணமாகப் புத்தக விநியோகம் தடைப்பட்டு வந்த நிலையில் தமிழ்நாடு அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 13 Jul 2020, 9:32 am
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 14ஆம் தேதி முதல் பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் பணி தொடங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
Samayam Tamil 12, 10 ஆம் வகுப்பு புத்தகங்கள் நாளை விநியோகம், எங்கு எப்படிப் பெறுவது?
12, 10 ஆம் வகுப்பு புத்தகங்கள் நாளை விநியோகம், எங்கு எப்படிப் பெறுவது?


தமிழ்நாடு முதல்வர் பழனிசாமி புத்தகம் வழங்கும் திட்டத்தை நாளை காலை தொடங்கி வைக்கிறார். அதன்பின் அனைத்து பள்ளிகளிலும் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கும் பணி தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக மாநிலத்தில் உள்ள பள்ளிகள் உள்படக் கல்வி நிலையங்கள் முடங்கிக் கிடக்கின்றன. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என அரசுப் பள்ளிகள் உள்பட பெரும்பாலான பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கிவிட்டன.

இந்த சூழலில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு சம்பந்தப்பட்ட மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் பணியைத் தொடங்கியுள்ளது.

அதன்படி ஜூலை 14ஆம் தேதி காலை இந்த திட்டத்தைத் தலைமைச் செயலகத்தில் வைத்து முதல்வர் பழனிசாமி தொடக்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பாடப் புத்தகங்கள் விநியோகம் தொடங்கவுள்ளது.

’இன்றைய தமிழகம்’ - பல்வேறு முக்கியச் செய்திகளின் தொகுப்பு...!

அதே வேளையில் நோய்த் தொற்று அபாயம் கருதி, புத்தகங்களைப் பெற மாணவர்கள் பள்ளிகளுக்கு எப்போது வர வேண்டும் என்பது குறித்துச் சம்பந்தப்பட்ட பள்ளிகள் பெற்றோர்களுக்கு செல்போனில் மெஸஜ் அனுப்பி வருகிறது.

பள்ளிக்குப் புத்தகம் பெற வரும் மாணவர் உள்ளிட்டவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வரவேண்டும்.மேலும் ஒரு மணி நேரத்தில் 20 பேருக்குப் புத்தகம் விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வரிசையில் கூட்டம் சேராமல் பார்த்துக் கொள்ளும்படி பள்ளிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த செய்தி