ஆப்நகரம்

ஒரே ஆண்டில் 133 குழந்தை திருமணம்.! முதல் இடத்தை பிடித்த திருப்பூர் மாவட்டம்..

கடந்த 12 மாநிலங்களில் அதிகளவு குழந்தை திருமண வழக்குகள் பதிவாகியுள்ள மாவட்டமாக திருப்பூர் அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 15 Nov 2019, 5:53 pm
இந்தியாவில் ஆணின் திருமண வயதானது 21 என்றும் பெண்ணின் திருமண வயது 18 என்பதும் மாற்றியமைக்கபட்ட சட்ட விதிமுறையாகும். இந்நிலையில் குடும்ப வறுமை, பெற்றோர் வலியுறுத்தல், காதல் விவகாரம் போன்ற பல காரணங்களால் சிறுமிகளுக்கு திருமணம் முடித்து வைப்பது ஓய்ந்த பாடில்லை.
Samayam Tamil ஒரே ஆண்டில் 133 குழந்தை திருமணம்.! முதல் இடத்தை பிடித்த திருப்பூர் மாவட்டம்..


அதன் தொடர்ச்சியாக கடந்த 12 மாதங்களாக திருப்பூர் மாவட்டத்தில் 133 குழந்தை திருமண வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 65 சதவீத திருமணங்கள் முன் கூட்டியே நிறுத்தப்பட்டுள்ளன என்று குழந்தைகள் மற்றும் சமுக நலத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பெண் கல்வி, பெண் சுதந்திரம் என்ற அடிப்படையில் பெண்ணின் திருமண வயதானது 18 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் குழந்தை திருமணத்தின் மீதான தண்டனையை உயர்த்த, 15 வயதில் இருந்து 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்து உறவு கொண்டால், பாலியல் வழக்காக கருதப்படும் என உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இன்னும் நடைமுறையில் உள்ளது.

Breaking: எனது மகளுக்கு ஐஐடி கடும் நெருக்கடி கொடுத்துள்ளது - ஃபாத்திமா தந்தை லத்தீப்

இந்நிலையில் இதுகுறித்து திருப்பூர் மாவட்ட சமூக கல்வி மற்றும் வளர்ச்சி மேம்பாட்டு துறை அதிகாரி எஸ். கதிர்வேல் பேசும்போது, கடந்த வருடம் நவம்பரில் இருந்து இந்த வருடம் அக்டோபர் வரை திருப்பூரில் 133 குழந்தை திருமண வழக்குகள் பதிவாகியுள்ளது என கூறினார்.

மதுரை- ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த காளை: கிணற்றை மூடி நிரப்பாமல் பிரச்சினையை மூடி மறைக்கும் அரசு!

மேலும் 65 சதவீத திருமணங்கள் முன் கூட்டியே நிறுத்தப்பட்டுள்ளதாகவும், 35 சதவீத திருமணங்கள் ஏற்கெனவே நடந்து முடிந்துள்ளதாகவும் தெரிவித்தார். அதன் நடவடிக்கையாக சமூக நலத்துறையுடன் சேர்ந்து போலீசாரின் உதவியுடன் சிறுமிகள் குடும்ப உறவில் இருந்து மீட்கப்பட்டதாக கூறினார். ஆரம்ப காலத்தில் வறுமை காரணமாக சிறுமிகளின் திருமணத்தை நடத்தி வந்தனர்.

ஆனால் தற்போது வேற்று சமூகத்தினரை காதலிக்கும் சிறுமிகளின் பெற்றோர், தங்களது சமூகத்தில் உள்ள ஆண்களுக்கு உடனடியாக திருமணம் செய்து விடுகின்றனர். இப்படியான திருமணம் நடந்து முடிந்த பிறகு சிறுமிகளை நாங்கள் அவர்களின் நலனுக்காக இல்லற வாழ்க்கையில் இருந்து மீட்கிறோம்.

ஆனால் பெரும்பாலான தம்பதிகள் சட்ட விரோதமாக மீண்டும் சேர்ந்து குடும்பம் நடத்தி வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி