ஆப்நகரம்

இடைத்தேர்தல்: 139 பேர் வேட்புமனுத் தாக்கல்

தமிழக இடைத்தேர்தலில் இதுவரை 139 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNN 2 Nov 2016, 7:02 pm
சென்னை: தமிழக இடைத்தேர்தலில் இதுவரை 139 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil 139 candidates filed thier nomination for by elections
இடைத்தேர்தல்: 139 பேர் வேட்புமனுத் தாக்கல்


கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது, பணப்பட்டுவாடா புகார் எழுந்ததையடுத்து, தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதேபோல், திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர் உயிரிழந்த காரணத்தால் அங்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் நிலவியது. இதனிடையே, தேர்தல் ரத்தான இரண்டு தொகுதிகள் உள்பட மூன்று தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 19-ம் தேதியன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதேபோல், புதுவை முதல்வராக உள்ள நாராயணசாமி போட்டியிடுவதற்கு வசதியாக நெல்லித்தோப்பு தொகுதி எம்.எல்.ஏ. ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த தொகுதிக்கும் வருகிற நவம்பர் மாதம் 19-ம் தேதியன்றே தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதேசமயம், வேட்புமனுக்கல் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் இன்றுடன் (நவ்.2-ம் தேதி) முடிவடைகிறது என்றும், அதன் மீதான பரிசீலனைகள் 3-ம் தேதி (நாளை) நடைபெறும் என்றும், வருகிற 5-ம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு கடைசி நாள். அதனைத்தொடர்ந்து அன்று மாலை வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெறவுள்ள 4 தொகுதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடைந்தது. அதில், மொத்தம் 139 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் தொகுதியில் 36 பேரும், அரவக்குறிச்சி தொகுதியில் 59 பேரும், திருப்பரங்குன்றம் தொகுதியில் 44 பேரும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
139 candidates filed thier Nomination for By Elections

அடுத்த செய்தி