ஆப்நகரம்

Tamil Nadu Weather: தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

Samayam Tamil 23 Aug 2019, 9:27 am
தமிழகத்தின் வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம், செவிலிமேடு, ஓரிக்கை, குருவிமலை, வெள்ளைகேட், பொன்னேரிகரை, வாலாஜாபாத் பகுதிகளில் நேற்று சுமார் ஒரு மணி நேரத்திக்கு மேலாக கன மழை பெய்தது.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நேற்று சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாரல் மழை பெய்தது. அதேபோல, திருவாரூர், நாகை, கிருஷ்ணகிரி, பெரம்பலூரின் பல பகுதிகளில் நேற்று நல்ல மழை பெய்தது.

சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட அந்த ரகசிய கேள்விகள் இவைதான்!!

இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில்; வடமேற்கு வங்கக்கடலில் காணப்படும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் சில இடங்களில் அடுத்த இரு நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும் வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

விஜய் டிவி அளித்த புகார் முற்றிலும் பொய்: பிக் பாஸ் மதுமிதா விளக்கம்

சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தென்மேற்கு அரபிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் சீற்றத்துடன் காணப்படுவதாலும், மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், ஆகஸ்ட் 23 முதல் 26-ஆம் தேதி மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தார்.

சந்திரயான் 2 விண்கலம் முதன்முதலாக நிலவை படம்பிடித்து அனுப்பியது!

அடுத்த செய்தி