ஆப்நகரம்

மணப்பாறையில் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது

திருச்சியை சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Samayam Tamil 11 May 2019, 12:29 pm
மணப்பாறையை சேர்ந்த புதுமணியாரம்பட்டியை சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். கட்டிட தொழில் செய்து வரும் இவருடைய தந்தை ரவிச்சந்திரன் குடிப்பழக்கம் கொண்டவர்.
Samayam Tamil மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது
மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது


வழக்கம் போல வீட்டுக்கு குடித்துவிட்டு வந்த ரவிச்சந்திரன், தனியாக இருந்த மகளிடம் 6 தவறாக நடக்க முயற்சித்துள்ளார். ஆனால் மாணவி சத்தம் போட, ஆத்திரத்தில் அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தனது தாயிடம் சிறுமி கூறியுள்ளார். அதை தொடர்ந்து மகளை தனது தந்தை வீட்டுக்கு இரவோடு இரவாக அனுப்பிவிட்டுவிட்டார். பிறகு, இந்த கொடுமையான சம்பவம் பற்றி போலீசிடம் புகார் தெரிவித்தார்.

அதில், தனது கணவன் ரவிசந்திரன் மகளை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார் என்றும், அதை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று கூறி அவரது தாய் மற்றும் சகோதிரிகளை வைத்து மிரட்டியதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

அதை தொடர்ந்து மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், ரவிசந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். தவிர, ரவிசந்திரனின் தாய், தந்தை மற்றும் சகோதிரிகள் மீது மொலை மிரட்டல் கீழ் வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மணப்பாறையில் பள்ளி மாணவி ஒருவர் அவரது தந்தையால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய உளவியல் ஆலோசனைகள் வழங்கிடவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி