ஆப்நகரம்

பெரம்பலூர் பயங்கரம்; விடுமுறை நாளில் 14 வயது சிறுவனுக்கு நடந்த விபரீதம்!

விடுமுறை நாட்களில் 14 வயது சிறுவனுக்கு யாரும் எதிர்பார்க்காத விபரீதம் நிகழ்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 20 May 2019, 7:15 am
கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்கும் வண்ணம், ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்த நாட்களில் வெயிலையும் தாண்டி, மாணவர்கள் மகிழ்ச்சியாக சுற்றி திரிவர்.
Samayam Tamil Student Dead


சில சமயங்களில் விபரீதமான நிகழ்வுகளும் நடைபெறுவது உண்டு. அப்படியொரு விபரீதம் பெரம்பலூரைச் சேர்ந்த சிறுவனுக்கு நடந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஆய்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல்.

இவருடைய 14 வயது மகன் தனுஷ். இவர் 10ஆம் வகுப்பிற்கு செல்ல இருந்தார். இந்நிலையில் நேற்று காலை அதே கிராமத்தைச் சேர்ந்த மனோகருக்கு சொந்தமான கிணற்றின் அருகே தனுஷ் சென்றுள்ளார்.

அப்போது கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். அவருக்கு நீச்சல் தெரியாததால், தண்ணீரில் மூழ்கி மூச்சித் திணறி உயிரிழந்தார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் வேப்பூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், தனுஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி