ஆப்நகரம்

தூத்துக்குடி அருகே 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; சுய நினைவு இழந்ததால் தீவிர சிகிச்சை!

தூத்துக்குடி: சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 20 Jan 2019, 12:56 am
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையை அடுத்த பொட்டலூரணி அருகே சுமார் 14 வயது மதிக்கத்தக்க சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இவர் சுயநினைவற்ற நிலையில் கிடந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.
Samayam Tamil Rape


இதையடுத்து சிறுமியை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்தவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சிறுமிக்கு வாய் வீக்கத்துடன் இருந்துள்ளது. தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்ய தாமதப்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. உடனடியாக வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.

இதுவரை சரியான மருத்துவம் கூட செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிறப்பு மருத்துவரை கொண்டு, சிகிச்சை அளிக்க வேண்டும்.

சைல்டு ஹெல்ப்லைன் , மாவட்ட குழந்தை நல பாதுகாப்பு அலுவலர், சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு அலகு உள்ளிட்ட குழந்தைகள் அமைப்புகள் பாதிக்கப்பட்ட குழந்தையின் பாதுகாப்பில் தனிக்கவனம் செலுத்தி தகுந்த பராமரிப்பும் பாதுகாப்பும் வழங்கும்படி குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மருத்துவ மாணவிக்கு கொடுத்த முக்கியத்துவம், ஏன் இந்த சிறுமிக்கு கொடுக்கப் படவில்லை என மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

அடுத்த செய்தி