ஆப்நகரம்

சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் கேட்டு சிறைத்துறையிடம் மனு!

உடல் நலக்குறைவால் உயிரிழந்த கணவர் ம.நடராஜனுக்கு, இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சசிகலா சார்பாக பரோல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 20 Mar 2018, 9:51 am
உடல் நலக்குறைவால் உயிரிழந்த கணவர் ம.நடராஜனுக்கு, இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சசிகலா சார்பாக பரோல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil 15 days parole petition has been submitted by sasikala to attend the funeral of m natarajan
சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் கேட்டு சிறைத்துறையிடம் மனு!

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் கணவரும் புதிய பார்வை பத்திரிகையின் ஆசிரியருமான ம.நடராஜன் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபரில் கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

ம.நடராஜன் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி

இந்நிலையில், கடந்த மார்ச் 16ஆம் தேதி அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதனையடுத்து, நேற்று நள்ளிரவு ம.நடராஜன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதன்பின் அவரது உடல், எம்பாமிங் செய்யப்பட்டு சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ம.நடராஜன் மற்றும் சசிகலா

இதைத் தொடர்ந்து, ம.நடராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சசிகலா சார்பாக பரப்பன அக்ரஹார சிறையில் 15 நாட்களுக்கான பரோல் மனு வழங்கப்பட்டுள்ளது. இந்த பரோல் மனுவை சிறைத்துறை நிர்வாகிகள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். முன்னதாக, கடந்த முறை ம.நடராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, சசிகலாவிற்கு 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி