ஆப்நகரம்

டெங்கு காய்ச்சலுக்கு 15 பேர் உயிரிழப்பு: நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்...!

டெங்கு காய்ச்சலுக்கு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

TNN 16 Aug 2017, 3:53 pm
சென்னை: டெங்கு காய்ச்சலுக்கு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
Samayam Tamil 15 dead for dengue fever in tn says govt
டெங்கு காய்ச்சலுக்கு 15 பேர் உயிரிழப்பு: நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்...!


தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டு அளிக்கக்கோரி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்கக் கோரி, நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் வரை, தமிழகத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் திருப்பூர் 4, ஈரோடு 3, கோவை 3, நெல்லை, திருச்சி, நாமக்கல், தருமபுரி, கரூரில் தலா ஒருவர் அடங்குவர். தமிழகம் முழுவதும் 90 டெங்கு காய்ச்சல் தடுப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கொசுவை முற்றிலும் ஒழிக்க இயலாது என்றும், கொசு ஒழிப்பில் மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. டெங்குவை தவிர்த்து பிற காய்ச்சல் காரணமாக 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிக்கன் குனியாவால் தமிழகத்தில் உயிரிழப்புகள் இல்லை என்றும், அதற்காக 13,840 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் செப்டம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

15 dead for Dengue fever in TN says Govt.

அடுத்த செய்தி