ஆப்நகரம்

கா்ப்பிணிகள் உயிாிழப்புக்கு அசுத்த ரத்தம் காரணமில்லை – ஆய்வுக்குழு

தமிழகத்தில் 4 மாத காலத்தில் 15க்கும் மேற்பட்ட கா்ப்பிணிகள் உயிாிழந்ததாக செய்தி வெளியான நிலையில், இதற்கு அசுத்த ரத்தம் தான் காரணம் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று ஆய்வுக்குழு தொிவித்துள்ளது.

Samayam Tamil 25 Apr 2019, 10:02 am
தமிழகத்தில் அசுத்த ரத்தத்தால் 4 மாத காலத்தில் 15க்கும் மேற்பட்ட கா்ப்பிணிகள் உயிாிழந்ததாக செய்தி செளியான நிலையில், இந்த தகவலை ஆய்வுக் குழு மறுத்துள்ளது.
Samayam Tamil Blood donation


தமிழகத்தில் 4 மாத காலத்தில், அசுத்த ரத்தம் காரணமாக 15 கா்ப்பிணிகள் உயிாிழந்ததாக கடந்த மாதம் செய்தி வெளியானது. இந்த உயிாிழப்புகள் அனைத்தும் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூா் ஆகிய 3 அரசு மருத்துவமனைகளில் நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.

தமிழக சுகாதாரத்துறை மீது சுமத்தப்பட்ட இந்த குற்றச்சாட்டு பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடா்பாக ஆய்வு செய்ய மருத்துவக்குழு அமைக்கப்பட்டது. கடந்த ஒரு மாத காலமாக ஆய்வு செய்த அந்த குழு கடந்த செவ்வாய் கிழமை அறிக்கையை தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில், அசுத்த ரத்தத்தால் தான் கா்ப்பிணிகள் உயிாிழந்தாா்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

கா்ப்பிணிகளுக்கு அசுத்த ரத்தம் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அசுத்த ரத்தம் vன ஆய்வில் எங்கும் நிரூபணம் செய்யப்படவில்லை. ரத்த வங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நாங்கள் மருத்துவ அறிக்கைகளையும் கவனத்தில் கொள்கிறோம். மருத்துவக் குழு அலட்சியமாக இருக்கும் என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவ கல்வி இயக்குநா் எட்வின் ஜோ தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி