சென்னை: சென்னை உயர் நீதிமன்ற புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 15 பேரும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மொத்த நீதிபதி பணியிடங்கள் எண்ணிக்கை 60 ஆக இருந்தது. தற்போது, இந்த எண்ணிக்கை 75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும் இப்போது 39 நீதிபதிகள் தான் இருந்து வந்தனர்.
அதனையடுத்து, காலியாக இருந்த நீதிபதி பணியிடங்களில் நிரப்பும் பொருட்டு வழக்கறிஞர்கள் 19 பேர், மாவட்ட நீதிபதிகள் 11 பேர் என அவர்களின் பெயர்களை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு உச்ச நீதிமன்றத்திற்கும் மத்திய அரசுக்கும் பரிந்துரை செய்தது. இந்த பட்டியல் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஆய்வு, மத்திய சட்டத்துறையின் ஆய்வுக்குச் சென்று, அதன்பின்னர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது.
தொடர்ந்து, அதனை பரிசீலித்த பிரணாப், முதல்கட்டமாக 15 பேரின் பெயர்களுக்கு ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 15 பேரும் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அதன்படி, வழக்கறிஞர்களான ஜெ. நிஷா பானு, வி.பார்த்திபன், கே.சுப்பிரமணியன், எம்.சுந்தர், அனிதா சுமந்த், எஸ்.எம்.சுப்பிரமணியன், எஸ்.எஸ். ரமேஷ், எம்.கோவிந்தராஜ், ஆர்.சுரேஷ்குமார் ஆகியோரும், மாவட்ட நீதிபதிகளான, ஏ.எம்.பஷீர் அகமது, ஜி.ஜெயச்சந்திரன், சி.வி.கார்த்திகேயன், ரவிந்தீரன், பி.வேல்முருகன், எஸ்.பாஸ்கரன் ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர்.
இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
15 sweared in as HC judges in Chennai HC #ChennaiHC #PresidentPranab
சென்னை உயர் நீதிமன்றத்தின் மொத்த நீதிபதி பணியிடங்கள் எண்ணிக்கை 60 ஆக இருந்தது. தற்போது, இந்த எண்ணிக்கை 75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும் இப்போது 39 நீதிபதிகள் தான் இருந்து வந்தனர்.
அதனையடுத்து, காலியாக இருந்த நீதிபதி பணியிடங்களில் நிரப்பும் பொருட்டு வழக்கறிஞர்கள் 19 பேர், மாவட்ட நீதிபதிகள் 11 பேர் என அவர்களின் பெயர்களை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு உச்ச நீதிமன்றத்திற்கும் மத்திய அரசுக்கும் பரிந்துரை செய்தது. இந்த பட்டியல் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஆய்வு, மத்திய சட்டத்துறையின் ஆய்வுக்குச் சென்று, அதன்பின்னர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது.
தொடர்ந்து, அதனை பரிசீலித்த பிரணாப், முதல்கட்டமாக 15 பேரின் பெயர்களுக்கு ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 15 பேரும் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அதன்படி, வழக்கறிஞர்களான ஜெ. நிஷா பானு, வி.பார்த்திபன், கே.சுப்பிரமணியன், எம்.சுந்தர், அனிதா சுமந்த், எஸ்.எம்.சுப்பிரமணியன், எஸ்.எஸ். ரமேஷ், எம்.கோவிந்தராஜ், ஆர்.சுரேஷ்குமார் ஆகியோரும், மாவட்ட நீதிபதிகளான, ஏ.எம்.பஷீர் அகமது, ஜி.ஜெயச்சந்திரன், சி.வி.கார்த்திகேயன், ரவிந்தீரன், பி.வேல்முருகன், எஸ்.பாஸ்கரன் ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர்.
இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
15 sweared in as HC judges in Chennai HC #ChennaiHC #PresidentPranab