ஆப்நகரம்

மதுரையில் ஆண் குழந்தைக்கு தாயான பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி

மதுரை: 10ம் வகுப்பு மாணவியை வன்கொடுமை செய்து கர்ப்பாக்கிய நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 16 Feb 2019, 8:59 am
மதுரையில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய நபர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil ஆண் குழந்தைக்கு தாயான 15 வயது சிறுமி- போலீஸார் விசாரணை


சேடப்பட்டியில் தினக்கூலி செய்து வாழ்ந்து வரும் குடும்பத்தில், பெற்றோர்கள் வேலைக்கு சென்றுவிட, மாணவி மட்டும் வீட்டில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு உடல்நல கோளாறு ஏற்பட்டு வந்தது.

இதனால் சிறுமியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் அவரது தாய். அப்போது மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் மாணவி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதை தாயிடம் கூறிய போது அவர் அதிர்ந்து போனார்.

மாணவியின் இந்த நிலைக்கு யார் காரணம் என பெற்றோர்கள் பலமுறை கேட்டுள்ளனர். அதற்கு அவரால் சரியாக பதில் கூற முடியவில்லை. இதனிடையே கடந்த 10ம் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

சிறுமி மைனர் என்பதால், அவர் தற்போது மாணவி மற்றும் சிறுமிகளுக்கான நல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை சேடப்பட்டி காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும், மாணவியின் இந்த நிலைமைக்கு யார் காரணம்? யாரால் இந்த கதிக்கு ஆளானார் என்பது தொடர்பாக போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி