ஆப்நகரம்

மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு 15 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு!

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 6000 கனஅடியில் இருந்து 15,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 8 Sep 2018, 1:34 pm
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 6000 கனஅடியில் இருந்து 15,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil mettur dam water level today
மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு 15 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு!


கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரியாற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்து, அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து நேற்று 6 ஆயிரத்து 12 கனஅடியாக இருந்த நிலையில், இன்று நீர்வரத்து மேலும் குறைந்து 6 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 6 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் நேற்றிரவு முதல் தண்ணீர் திறப்பு 15 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

இன்றைய காலைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.6 அடியாகவும், நீர்இருப்பு 92.83 டிஎம்சி.,யாகவும் உள்ளது.

அடுத்த செய்தி