ஆப்நகரம்

கூட்டுறவு கடன் தள்ளுபடி: அமைச்சர் சொன்ன தகவல்!

16 லட்சம் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு 12 லட்சம் விவசாயிகளுக்கு ரசீது வழங்கப்பட்டுள்ளது என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 22 Jun 2021, 3:15 pm
திமுக தனது தேர்தல் அறிக்கைகளில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. அவை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.
Samayam Tamil tn loan waiver


பத்தாண்டுகளுக்குப் பின் வெற்றி பெற்று அரியணையில் ஏறிய திமுகவுக்கு கொரோனா பரவல் மிகப் பெரும் சவாலாக இருந்தது. இதனால் அதன் தடுப்பு பணிகளில் முழு கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக செயல்படுத்த முடியவில்லை.
தமிழ்நாட்டில் ஜூலையில் பள்ளிகள் திறப்பா? வெளியாகும் அறிவிப்பு!
இருப்பினும் கொரோனா நிவாரண நிதி 4000 ரூ, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், பால் விலை குறைப்பு உள்ளிட்ட சில கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட்டன.

குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை, கேஸ் சிலிண்டருக்கு 100 ரூ மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, உள்ளிட்டவை நிறைவேற்றப்படவில்லை என்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அத்துடன் கூட்டுறவு கடன்கள் ரத்து அறிவிப்பும் உள்ளது.
ஹெச்.ராஜாவுக்கு கட்சிக்குள்ளே கருப்புக் கொடி! காலியானதா பாஜக காரைக்குடி?
இந்நிலையில் இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2 ஆம் நாளான இன்று ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி சட்டப்பேரவையில் பேசிய போது, “கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடன் பெற எந்த தடையுமில்லை; விவசாயிகள் யார் வேண்டுமானாலும் கடன் பெற்றுக்கொள்ளலாம்.16 லட்சம் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 12 லட்சம் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடிக்கான ரசீது வழங்கப்பட்டுள்ளது” என்று தகவல் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி