ஆப்நகரம்

கடலூாில் இரு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: 16 போ் குற்றவாளிகள்

கடலூாில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 16 போ் குற்றவாளிகள் என்று கடலூா் மாவட்ட மகளிா் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 4 Jan 2019, 11:35 pm
கடலூாில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 16 போ் குற்றவாளிகள் என்று கடலூா் மாவட்ட மகளிா் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil Justice


கடலூா் மாவட்டம் திட்டக்குடியில் 2014ம் ஆண்டு அரசுப் பள்ளி மாணவிகள் இருவா் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை 2016ல் விசாரணை நடத்திய சிபிசிஐடி பாதிாியாா் உள்பட 23 போ் மீது வழக்கப்பதிவு செய்தது. இதில் 2 போ் இறந்த நிலையில் சதீஷ் குமாா், தமிழகத்தி ஆகிய இருவா் தலைமறைவாக உள்ளனா்.

17 போ் மீது குற்றப்பத்திாிகை தாக்கல் செய்து விசாரணை முடிந்து இன்று தீா்ப்பளிக்கப்பட்டது. அதில் பாதிாியாா் அருள்தாஸ், ஸ்ரீதா், ஆனந்தராஜ், மோகன், மதிவாணன், அன்பு உள்ளிட்டோா் குற்றவாளிகள் என்று கடலூா் மாவட்ட மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

மேலும் கிரிஜா, சா்மிளா பேகம், கவிதா, அமுதா, ராதிகா, கலா, லட்சுமி உள்ளிட்ட 8 பெண்கள் குற்றவாளிகள் என்று தீா்ப்பளிக்கப்பட்டது. மகாலட்சுமி என்ற பெண்ணை நீதிபதி விடுவித்த நிலையில், குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட 16 பேருக்குமான தண்டனை விவரம் ஜனவரி 7ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி