ஆப்நகரம்

அரக்கோணத்தில் 4 வயது சிறுமிகளை பலாத்காரம் செய்த ‘மைனர்’ கைது

வேலூர் மாவட்டம், அரக்கோணத்தில் 4 வயதே ஆன 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, 16 வயது காமக் கொடூரனை போலீசார் கைது செய்தனர்.

TNN 15 Nov 2016, 10:16 pm
வேலூர் மாவட்டம், அரக்கோணத்தில் 4 வயதே ஆன 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, 16 வயது காமக் கொடூரனை போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil 16 year old boy held for sexually abusing two minor girls in tamil nadu
அரக்கோணத்தில் 4 வயது சிறுமிகளை பலாத்காரம் செய்த ‘மைனர்’ கைது


அரக்கோணத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஆய்வாளராகப் பணிபுரிபவர் கலைச்செல்வி. இவரது உறவினரின் மகள்களையே சம்பந்தப்பட்ட குற்றவாளி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். கடந்த சனிக்கிழமையன்று 2 சிறுமிகளும், அந்த சிறுவனின் வீட்டுக்கு விளையாடச் சென்றுள்ளனர்.

அப்போது யாரும் இல்லாத நேரத்தில் கதவை தாழிட்டுக் கொண்ட சிறுவன், 2 சிறுமிகளையும் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதுபற்றி அந்த சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. எனினும், அதற்கடுத்த நாள் 2 சிறுமிகளும், உடல் உறுப்புகள் வலிப்பதாக, பெற்றோரிடம் கூறியதை அடுத்தே, இந்த விசயம் தெரியவந்தது.

உடனடியாக, போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன்பேரில் விசாரணை நடத்திய அரக்கோணம் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் கலைச்செல்வி, சிறுமிகளை கற்பழித்த சிறுவனை கைது செய்தார். வேலூரில் உள்ள சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த சிறுவன், பின்னர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டதாக, ஆய்வாளர் கலைச்செல்வி தெரிவித்தார்.

A 16-year-old boy has been arrested for sexually abusing two minor girls at Itchipudur near Arakkonam in Tamil Nadu.

அடுத்த செய்தி