ஆப்நகரம்

வருமான வரி சோதனை... சசிகலா குடும்ப நிறுவனங்களிடமிருந்து ரூ.1600 கோடி முடக்கம்..?

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் மன்னார் சசிகலா குடும்பத்தினர் நடத்தி வந்த 9 போலி நிறுவனங்களின் மூலம் வைத்திருந்த சுமார் 1, 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

Samayam Tamil 5 Nov 2019, 4:26 pm
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் மன்னார் சசிகலா குடும்பத்தினர் நடத்தி வந்த 9 போலி நிறுவனங்களின் மூலம் வைத்திருந்த சுமார் 1, 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
Samayam Tamil 1600 crore ceased from sasikala familys institutions by income tax department
வருமான வரி சோதனை... சசிகலா குடும்ப நிறுவனங்களிடமிருந்து ரூ.1600 கோடி முடக்கம்..?




சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்களின் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட 180 க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். இதிலி சசிகலா குடும்பத்தினர், 60-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி சுமார் 1,500 கோடி ருபாய்க்கும் மேல் வரை வரி ஏய்ப்பு செய்தது தெரிய வந்தது.

கூடங்குளம் அணு உலையில் சைபர் அட்டாக்; செய்தது யார் தெரியுமா?- வெளியான அதிர்ச்சி!

மேலும், பல நூறு கோடிகளுக்கு சொத்துகள் வாங்கிய ஆவணங்களும் சோதனையின் போது சிக்கின. இதனையடுத்து சசிகலாவின் உறவினர்கள் மற்றும் பினாமிகள் உட்பட பலரிடமும், வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை தொடர்ந்தனர்..

நவம்பர் 10 முதல் யாருக்கும் விடுப்பு கிடையாது: தமிழ்நாடு டிஜிபி அறிவிப்பு

இந்நிலையில், தற்போது சசிகலா குடும்பத்தினர் பினாமி பெயரில் நடத்தி வந்த 9 நிறுவனங்களுக்கு மட்டும் சொந்தமான சுமார் 1,600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப் படுவதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி