ஆப்நகரம்

தமிழகத்தில் இன்றும் 17 பேர் பலி..! மேலும் 1,562 பேர் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் இன்று மேலும் 17 பேர் பலியாகியுள்ளனர்.

Samayam Tamil 8 Jun 2020, 7:42 pm
தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு நிலவரத்தை குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,229 ஆக உயர்ந்துள்ளது.
Samayam Tamil corona cases in tamilnadu today


சென்னையில் மட்டும் இன்று ஒரேநாளில் 1,149 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னையின் மொத்த கொரோனா பாதிப்பு 23,298 ஆக அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் இன்று மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 286 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 528 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரை 17, 527 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் தற்போது சிகிச்சையிலும், தனிமைப்படுத்தப்பட்டும் 15,413 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி