ஆப்நகரம்

இடைத்தேர்தலா?, மேல்முறையீடா? : தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் அதிரடி முடிவு

இடைத் தேர்தலை சந்திப்பதா? அல்லது உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதா ? 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் குறித்து டிடிவி தினகரன் தரப்பு முக்கிய முடிவு எடுத்துள்ளனர்.

Samayam Tamil 26 Oct 2018, 7:42 pm
மதுரை : 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என டிடிவி தினகரன் தரப்பினர் முக்கிய முடிவு எடுத்துள்ளனர்.
Samayam Tamil 18 MLA


கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போது டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் 18 எம்எல்ஏக்களை சபாநாயகர தகுதி நீக்கம் செய்தார். அந்த உத்தரவு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஆலோசனை கூட்டம் :
தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் அடுத்து என்ன செய்வது என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தினகரன் தலைமையில் மதுரை மாட்டுத்தாவணி அருகில் உள்ள ஹோட்டலில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.


அடுத்த முடிவு:
இதில் இடைத் தேர்தலை சந்திப்பதா? அல்லது உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதா என ஆலோசனை செய்யப்பட்டது.

அதில் சிலர் இடைத்தேர்தல் சந்தித்தால் அதிக செலவாகும், அதனால் மேல்முறையீடு செய்யலாம் என கூறினர்.


சிலர் மேல்முறையீடு செய்தால் தீர்ப்பு வர கால தாமதமாகும் அதனால் இது எடப்பாடி - பன்னீர் செல்வம் தரப்புக்கு சாதகமாக அமையும். அதனால் இடைத்தேர்தல் சந்திப்பது நல்லது என கூறினர்.

இந்த ஆலோசனை முடிவில், இடைத்தேர்தலுக்கு பதிலாக 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் செல்லாது என வழக்கு தொடர முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி