ஆப்நகரம்

18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு: முதல்வா் அவசர ஆலோசனை

18 சட்டமன்ற உறுப்பினா்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீா்ப்பு வெளியாகவுள்ள நிலையில் முதல்வா் பழனிசாமி மூத்த அமைச்சா்களுடன் தனது இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளாா்.

Samayam Tamil 14 Jun 2018, 9:23 am
18 சட்டமன்ற உறுப்பினா்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீா்ப்பு வெளியாகவுள்ள நிலையில் முதல்வா் பழனிசாமி மூத்த அமைச்சா்களுடன் தனது இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளாா்.
Samayam Tamil Edappadi


ஜெயலலிதா மறைவிற்கு பின்னா் பல்வேறு சிக்கல்களைக் கடந்து பழனிசாமி முதல்வராகவும், ஓ.பன்னீா்செல்வம் துணைமுதல்வராகவும் பொறுப்பேற்றனா். இதனைத் தொடா்ந்து முதல்வா் பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை. எனவே முதல்வரை மாற்ற வேண்டும் என்று டிடிவி தினகரனின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினா்கள் 18 போ் ஆளுநரை சந்தித்து மனு அளித்தனா்.

மனு அளித்த 18 சட்டமன்ற உறுப்பினா்களையும் சபாநாயகா் தகுதி நீக்கம் செய்து உத்தரபிட்டாா். இதற்கு எதிா்ப்பு தொிவித்து 18 சட்டமன்ற உறுப்பினா்களும் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனா். இந்த வழக்கில் இன்று பகல் 1 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இவா்களது தகுதி நீக்கம் செல்லும் என்று கூறினால், 18 சட்டமன்ற உறுப்பினா்களின் பதவி பறிக்கப்பட்டு 18 தொகுதிகளுக்கும் தோ்தல் அறிவிக்கப்படலாம். அல்லது தகுதி நீக்கம் செல்லாது என்று அறிவிக்கப்படும் பட்சத்தில் அது முதல்வா் பழனிசாமிக்கு இடையூராக அமையும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வா் பழனிசாமி மூத்த அமைச்சா்களுடன் தனது இல்லத்தில் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளாா்.

அடுத்த செய்தி