ஆப்நகரம்

18 MLAs Disqualification Case: விசாரணையை வியாழக்கிழமை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு!!

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இரு தரப்பும் அவகாசம் கோரியதையடுத்து, வழக்கு வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 20 Aug 2018, 2:24 pm
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இரு தரப்பும் அவகாசம் கோரியதையடுத்து, வழக்கு வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil விசாரணையை வியாழக்கிழமை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு!!
விசாரணையை வியாழக்கிழமை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு!!


அதிமுகவைச் சேர்ந்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர், ஆட்சியை கலைக்கும் விதமாக செயல்பட்டதாக கூறி, சபாநாயகர் தனபால் அவர்களை தகுதிநீக்கம் செய்தார். இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், சபாநாயகரின் தகுதி நீக்கத்தை எதிர்த்து அவர்கள் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்தஉயர்நீதிமன்ற நீதிபதிகள், சபாநாயகரின் முடிவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் இரு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று நடைபெற்றது. இதில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், சபாநாயகரின் தகுதிநீக்க முடிவு தவறானது என வாதாடினார்.

இந்த வாதத்திற்குப் பின் இரு தரப்பினரும் கூடுதல் அவகாசம் கேட்டுக்கொண்டதால், இந்த வழக்கின் விசாரணை வியாழக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி