ஆப்நகரம்

AIADMK: ஆட்சி இருக்கும், ஆனா முதல்வர் இருக்க மாட்டார்: தங்கத்தமிழ் செல்வன் கருத்து

டிடிவி தினகரனின் ஆதரவாளரான தங்கத்தமிழ் செல்வன், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு தங்களுக்கு ஆதரவாக வந்தால், ஆட்சியைக் கலைக்காமல், முதல்வரை மற்றும் மாற்றிவிடுவோம் என தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 31 Aug 2018, 11:02 am
டிடிவி தினகரனின் ஆதரவாளரான தங்கத்தமிழ் செல்வன், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு தங்களுக்கு ஆதரவாக வந்தால், ஆட்சியைக் கலைக்காமல், முதல்வரை மற்றும் மாற்றிவிடுவோம் என தெரிவித்துள்ளார்.
Samayam Tamil ஆட்சி இருக்கும், ஆனா முதல்வர் இருக்க மாட்டார்: தங்கத்தமிழ் செல்வன் கருத்து
ஆட்சி இருக்கும், ஆனா முதல்வர் இருக்க மாட்டார்: தங்கத்தமிழ் செல்வன் கருத்து


18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு, மூன்றாவது நீதிபதி அமர்வு முன் விசாரணையில் உள்ளது. ஏறத்தாழ அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், டிடிவி தினகரனின் ஆதரவாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களில் ஒருவருமான தங்கத்தமிழ் செல்வன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சனம் செய்தது தவறு என்பதை உணர்ந்ததால், மன்னிப்பு கேட்டேன். மூன்றாவது நீதிபதி முன் விசாரணையில் இருக்கும், இந்த வழக்கின் தீர்ப்பு எங்களுக்கு ஆதரவாக இருந்தால், ஆட்சியைக் கலைக்காமல், முதல்வரை மட்டும் மாற்றி விடுவோம்” என தெரிவித்துள்ளார்.

அதேசமயம் இந்த வழக்குக் குறித்து கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், “18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நல்ல விதமான தீர்ப்பு வரும். அப்போது இந்த ஆட்சி முடிவுக்கு வரும்,” என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி