ஆப்நகரம்

சூடான சாம்பார் கொட்டியதில் 1.5 வயது குழந்தை பரிதாப பலி

சென்னை மண்ணடி ஸ்டிரிங்கர் சாலையை சேர்ந்தவர் சூரியா (25), இவர் மெக்கானிக் வேலை செய்யும் தனது கணவர் முருகனை கடந்த ஒரு வருடமாக பிரிந்து வாழ்கிறார். இவர்களுக்க 1.5 வயதில் பூமிகா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது.

Samayam Tamil 17 Dec 2018, 4:45 pm
சென்னை மண்ணடி ஸ்டிரிங்கர் சாலையை சேர்ந்தவர் சூரியா (25), இவர் மெக்கானிக் வேலை செய்யும் தனது கணவர் முருகனை கடந்த ஒரு வருடமாக பிரிந்து வாழ்கிறார். இவர்களுக்க 1.5 வயதில் பூமிகா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது.
Samayam Tamil child


சூரியா தினமும் பாரீஸில் உள்ள ஒரு தள்ளுவண்டி கடையில் உணவு சமைக்கும் வேலை செய்து வந்துள்ளார். அவர் மண்ணடியில் உள்ள ஸ்டிங்கர் சாலை பகுதியில் ரோட்டோரமாக குடிசை அமைத்து வாழ்ந்து வருகிறார். தனது குடிசையின் அருகிலேயே உணவுகளை சமைத்து தள்ளுவண்டி கடைகாரருக்கு ஒப்படைப்பது வழக்கம்.

இப்படியாக கடந்த ஞாயிற்று கிழமை அன்று சூரியா தனது வீட்டின் அருகில் ஒரு பெரிய பாத்திரத்தில் சாம்பார் தயார் செய்துள்ளார். அவரது குழந்தை பூமிகா அருகில் விளையாடி கொண்டிருந்திருக்கிறார்.

அப்பொழுது ஏதோ பொருளை எடுக்க வீட்டிற்குள் சென்ற போது குழந்தை பூமீகா வலியில் அலறும் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக குடிசையில் இருந்து பூமிகா வெளியில் வந்து பார்த்தபோது அவர் சாம்பார் வைத்திருந்த பாத்திரம் தரையில் உருண்டு கொண்டிருந்தது. குழந்தை பூமிகாவின் மீது சூடான சாம்பார் முழுவதுமாக கொட்டியிருந்தது.

உடனடியாக அவர் குழந்தையை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்றபோது குழந்தைக்கு 51 சதவீத தீக்காயம் ஏற்பட்டிருந்தது. மேலும் டாக்டர் எவ்வளவோ முயன்றும் குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியாமல் போனது.

சாம்பார் கொட்டியதில் 18 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி