ஆப்நகரம்

தூத்துக்குடி துயரம்: 18 பேர் உடலில் துப்பாக்கிக் குண்டு

தூத்துக்குடியில் போலீசார் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட 18 பேரின் உடலில் துப்பாக்கிக் குண்டு அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்ப்பட்டுள்ளது.

Samayam Tamil 24 May 2018, 10:33 am
தூத்துக்குடியில் போலீசார் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட 18 பேரின் உடலில் துப்பாக்கிக் குண்டு அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்ப்பட்டுள்ளது.
Samayam Tamil Hospital


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தபோது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது.

தடைகளை மீறி போராட்டக்காரர்கள் ஆயிரக்கணக்கானோர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நுழைந்தனர். அப்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் 18 பேரின் உடலிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் துப்பாக்கி குண்டுகளை நீக்கியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி