ஆப்நகரம்

திருச்சியில் தடை செய்யப்பட்ட 2.5 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்!

திருச்சி: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

TIMESOFINDIA.COM 14 Jan 2019, 10:19 pm
கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல், தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல இடங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ரகசியமாக பயன்படுத்தப் பட்டு வருகின்றன.
Samayam Tamil Plastic Ban


இதைக் கண்டறியும் முயற்சியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், திருச்சி கமர்சியல் தெருவில் சுகாதாரத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது 8 கடைகளில் இருந்து, 2.5 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து சம்பந்தப்பட்ட கடைகளுக்கு ரூ.30,000 அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் கூறுகையில், காந்தி மார்க்கெட் பகுதியில் வேறு வழிகளில் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்து வந்தனர். அவர்களிடம் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

அடுத்த செய்தி