ஆப்நகரம்

தேர்தல் நடத்தை விதி: ரூ 2.8 கோடி பணம் பறிமுதல்

தமிழக தேர்தல் அலுவலர்கள் இன்று திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் ரூ 2.8 கோடி பணம் பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன

TNN 11 Mar 2016, 8:17 pm
ஸ்ரீரங்கம்: தமிழக தேர்தல் அலுவலர்கள் இன்று திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் ரூ 2.8 கோடி பணம் பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
Samayam Tamil 2 8 crores seized during vehicle check in srirangam
தேர்தல் நடத்தை விதி: ரூ 2.8 கோடி பணம் பறிமுதல்


வரும் மே 16-ஆம் தேதியன்று தமிழக சட்டமன்ற தேர்தல் நடப்பதையொட்டி, தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தமிழகம் முழுவதிலும் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

இன்று திருச்சி மாவட்டம ஸ்ரீரங்கத்தில் தேர்தல் பறக்கும் படை மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தில் பணம் இருப்பது தெரியவந்தது. அவ்வாகனத்தில்இருந்த 2 கோடியே 80 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஸ்ரீரங்கம் வருவாய் வட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகின்றார்.

இதனிடையே, தமிழக திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்களின் பணி தேவைக்காக ரூ 2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் பணம்வரை கொண்டு செல்ல அனுமதி வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

அடுத்த செய்தி