நெல்லையில் இடி தாக்கியதில் இருவர் பலியாகியுள்ளனர்.
பருவ மழை பொய்த்ததால் தமிழக முழுவதும் கடும் வெப்பம் வாட்டி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில பகுதிகள் கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று முன் தினத்திலிருந்து இடியுடன் கூடிய கோடை மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் இடி விழுந்த வெவ்வேறு சம்பவங்களில் இருவர் பலியாகினர். பிராஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த சோமு என்பவர் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது இடிதாக்கி சம்பவ இடத்திலே உடல் கருகி பலியானார். இதே போல நெல்லையின் மற்றொரு பகுதியில் நடைபெற்ற சம்பவத்தில் மற்றுமொருவரும் பலியானார்.
மின்னல்,இடி மட்டுமல்லாமல் சூறைக்காற்றுடனும் நெல்லையில் மழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாவட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்து சேதமாகியுள்ளன.
2 died in thunderstorm in Nellai
பருவ மழை பொய்த்ததால் தமிழக முழுவதும் கடும் வெப்பம் வாட்டி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில பகுதிகள் கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று முன் தினத்திலிருந்து இடியுடன் கூடிய கோடை மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் இடி விழுந்த வெவ்வேறு சம்பவங்களில் இருவர் பலியாகினர். பிராஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த சோமு என்பவர் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது இடிதாக்கி சம்பவ இடத்திலே உடல் கருகி பலியானார். இதே போல நெல்லையின் மற்றொரு பகுதியில் நடைபெற்ற சம்பவத்தில் மற்றுமொருவரும் பலியானார்.
மின்னல்,இடி மட்டுமல்லாமல் சூறைக்காற்றுடனும் நெல்லையில் மழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாவட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்து சேதமாகியுள்ளன.
2 died in thunderstorm in Nellai