ஆப்நகரம்

கொடைக்கானலில் போதை காளான் சாப்பிட்ட இருவர் பலி

தடை செய்யப்பட்ட போதை காளானை சாப்பிட்ட சுற்றுலாப்பயணிகள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

TNN 13 Nov 2016, 5:35 pm
திண்டுக்கல்: தடை செய்யப்பட்ட போதை காளானை சாப்பிட்ட சுற்றுலாப்பயணிகள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
Samayam Tamil 2 dies after eating magic mushroom
கொடைக்கானலில் போதை காளான் சாப்பிட்ட இருவர் பலி


கேரளாவின் ஆலப்புழாவை சேர்ந்த 13 இளைஞர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். கொடைக்கானலில் வட்டகானல் பகுதியில் தனியார் காட்டேஜில் ரூம் எடுத்து தங்கியிருந்தனர். இரவு மது குடித்து விட்டு, தடை செய்யப்பட்ட போதைக்காளானை சாப்பிட்டுள்ளனர்.

போதை காளானை சாப்பிட்டு விட்டு கனலில் குளிர்காய்ந்து கொண்டிர்ந்த 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து இறந்தனர். மேலும் 3 பேர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீஸார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி