ஆப்நகரம்

விநாயகர் சிலையை கரைக்க செல்லும் போது ஆற்றில் மூழ்கி இளைஞரகள பலி!

ஈரோட்டில் விநாயகர் சிலையை கரைக்க செல்லும் போது பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 16 Sep 2018, 4:02 pm
ஈரோட்டில் விநாயகர் சிலையை கரைக்க செல்லும் போது பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil drowned death


நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலகலமாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு இடங்களிலும் பல விதமான விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டது. களி மண் விநாயகர், முறுக்கு விநாயகர், ரூபாய் நோட்டு விநாயகர், மலர் விநாயகர் என பல்வேறு பொருட்களால் பிள்ளையார் சிலைகள செய்யப்பட்டன.

இதனையடுத்து, விநாயகர் சதுர்த்தியின் முக்கிய நிகழ்வாக பிள்ளையார் சிலைகளை நீர்நிலைகளில் இன்று கரைக்கப்பட்டது. இதேபோல், திருப்பூரில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு ஈரோடு பவானி ஆற்றில் கரைக்கப்பட்டது.

இந்த நிலையில், திருப்பூர் மும்மூர்த்தி நகரில் இருந்து ஈரோடு பவானி ஆற்றில் கரைப்பதற்காக பக்தர்கள் எடுத்து வந்துள்ளனர். அப்போது எதிர்பாரதவிதமாக மூன்று பேர் பவானி ஆற்றுக்குள் மூழ்கினர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அதில் ஒருவரை மட்டுமே மீட்க முடிந்தது.

மற்ற இரண்டு பேர் ஆற்றுக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விநாயகர் சிலையை கரைக்க சென்ற இடத்தில் ஆற்றில் மூழ்கி இளைஞரகள உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி