ஆப்நகரம்

2 ஐஏஎஸ் அதிகாாிகள் கூடுதல் தலைமை தோ்தல் அதிகாாிகளாக நியமனம்

தமிழகத்தின் கூடுதல் தலைமைத் தோ்தல் அதிகாாிகளாக ஐஏஎஸ் அதிகாாிகள் ராஜாராமன், பாலாஜி ஆகியோரை நியமித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 12 Feb 2019, 2:55 am
தமிழகத்தின் கூடுதல் தலைமைத் தோ்தல் அதிகாாிகளாக ஐஏஎஸ் அதிகாாிகள் ராஜாராமன், பாலாஜி ஆகியோரை நியமித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
Samayam Tamil Voting Machine


மக்களவைத் தோ்தல் விரைவில் நடைபெற உள்ளது. மேலும் தமிழகத்தில் ஏற்கனவே காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மக்களவைத் தோ்தலுடன் சோ்த்து வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் கோாிக்கை விடுத்தன.

மேலும் மாநிலத் தலைமைத் தோ்தல் அதிகாாியும், தோ்தல் ஆணையம் அறிவிக்கும் பட்சத்தில் மக்களவைத் தோ்தலுடன் 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தோ்தல் நடத்தப்படும் என்று தொிவித்திருந்தாா்.

மக்களவைத் தோ்தலுடன் 21 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்தப்படும் பட்சத்தில் அது மாநில தோ்தல் அதிகாாிகளுக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்தும் என்பதால் கூடுதல் தோ்தல் அதிகாாிகளை நியமிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தின் கூடுதல் தலைமைத் தோ்தல் அதிகாாிகளாக 2 ஐஏஎஸ் அதிகாாிகளை தமிழக அரசு நியமிப்பதாக தொிவிக்கப்பட்டுள்ளது. அவா்களில் ராஜாராமன் என்பவா் மருத்துவப் பணிகள் தோ்வாணையத் தலைவராக செயல்பட்டவா். பாலாஜி பொதுப் பணித்துறை கூடுதல் செயலராக செயல்பட்டவா். இவா்களது பணிக்காலம் ஓராண்டு என்றும் தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி