ஆப்நகரம்

விருதுநகரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 2 போ் உயிாிழப்பு

விருதுநகர்மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ரெட்டியபட்டி அடுத்த கத்தாளம் பட்டி விளக்கில் இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலையே உயிரிழப்பு.

Samayam Tamil 11 Mar 2019, 11:27 pm
விருதுநகர்மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ரெட்டியபட்டி அடுத்த கத்தாளம் பட்டி விளக்கில் இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலையே உயிரிழப்பு.
Samayam Tamil Accident.


அருப்புக்கோட்டை அருகே ரெட்டியபட்டியை அடுத்த மறவர் பெருங்குடியை சேர்ந்த சாமிநாதன், கந்தசாமி மற்றும் மதுரை பாலமேட்டை சேர்ந்த ராஜேஷ் ஆகிய மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

இருசக்கர வாகனம் ரெட்டியபட்டியை அடுத்த கத்தாளம்பட்டி விளக்கில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஜல்லி கிரசர் அருகே வரும் போது கல்குவாரியில் இருந்து கிரசர்க்கு முண்டுக்கல் ஏற்றி வந்த டிப்பர் லாரி அருப்புக்கோட்டை - சாயல்குடி பிரதான சாலையில் இருந்து கிரசருக்கு நுழையும் போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இதில் இருசக்கர வாகனத்தில் வந்த மறவர் பெருங்குடியை சேர்ந்த சாமிநாதன் மற்றும் கந்தசாமி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலையே உடல்நசுங்கி உயிரிழந்தனா்.

மேலும் விபத்து குறித்து அறிந்து விரைந்து வந்த ரெட்டியபட்டி காவல்துறையினர் படுகாயம் அடைந்த ராஜேஷை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து சம்பவம் குறித்து ரெட்டியபட்டி காவல் துறையினர் லாரி ஓட்டுனரைப் பிடித்து விபத்திற்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி