ஆப்நகரம்

டிரக் மீது கார் மோதி விருதுநகரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் மூவர் பலி!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே இன்று காலை நின்று கொண்டு இருந்த டிரக் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 11 Jul 2019, 2:58 pm
அதே காரில் பயணித்த மற்ற மூவர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த விபத்து மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது.
Samayam Tamil Acci 3


இறந்தவர்கள் மூவர் ராஜம்மாள் (55), சரோஜா (45), ராஜாராம் (42) என்பதும், இவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் பாலையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. காயமடைந்த கார் ஓட்டி வந்த சுகன் மற்றும் செல்வலட்சுமி, ராஜ் குமார் மூவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் நடக்கவிருந்த ஒரு திருமணத்திற்கு சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது. நிறுத்தப்பட்டிருந்த டிரக் கோயமுத்தூரில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு செல்லும்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் எஸ்.பி., அருண் பாலகோபாலன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார். வாகனங்களை நெடுஞ்சாலைகளில் நிறுத்தக் கூடாது என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு எஸ்.பி., உத்தரவு பிறப்பித்தார். அவ்வாறு நிறுத்துவதால்தான் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாக அவர் தெரிவித்துள்ளார். பொதுவாக இரவு நேரங்களில் இதுபோன்று வாகனங்களை சாலையில் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும்.

அடுத்த செய்தி