சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்திற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 2 டன் மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 22ம் தேதி திடீரென உடல்நலக்குறைவு காரணமாக மருந்துவமனையில் அனுமதிப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, நேற்று இரவு 11.30 மணியளவில் மண்ணுலகை விட்டு மறைந்தார் . கடந்த 75 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் நுரையீரல் தொற்றால், சிகிச்சை பெற்றிருந்தார்.
இவரது இறுதிச்சடங்கு இன்று மாலை நான்கு மணியளவில் நடந்தது. இதில் இவரது உடலை கொண்டு செல்ல, பயன்படுத்தப்பட்ட ராணுவ வண்டி மற்றும் பீரங்கியை அலங்கரிக்க, பெங்களூரு உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 2 டன் மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதில் ரோஜா, வெள்ளை சாமந்தி உள்ளிட்ட மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவரது இறுதி ஊர்வலத்துக்கு இந்த வண்டிகளை தயார் செய்ய சுமார் 40 பணியாளர்கள் அதிகாலை 3 மணி முதல் அலங்காரப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த செப்டம்பர் 22ம் தேதி திடீரென உடல்நலக்குறைவு காரணமாக மருந்துவமனையில் அனுமதிப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, நேற்று இரவு 11.30 மணியளவில் மண்ணுலகை விட்டு மறைந்தார் . கடந்த 75 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் நுரையீரல் தொற்றால், சிகிச்சை பெற்றிருந்தார்.
இவரது இறுதிச்சடங்கு இன்று மாலை நான்கு மணியளவில் நடந்தது. இதில் இவரது உடலை கொண்டு செல்ல, பயன்படுத்தப்பட்ட ராணுவ வண்டி மற்றும் பீரங்கியை அலங்கரிக்க, பெங்களூரு உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 2 டன் மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதில் ரோஜா, வெள்ளை சாமந்தி உள்ளிட்ட மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவரது இறுதி ஊர்வலத்துக்கு இந்த வண்டிகளை தயார் செய்ய சுமார் 40 பணியாளர்கள் அதிகாலை 3 மணி முதல் அலங்காரப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.