ஆப்நகரம்

சென்னையில் மின்சார ரயில் மோதி இருவா் பலி

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையம் அருகே இன்று காலை தண்டவாளத்தை கடக்க முயன்ற இருவா் ரயில் மோதி உயிாிழந்தனா்.

Samayam Tamil 30 Aug 2018, 11:42 am
சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையம் அருகே இன்று காலை தண்டவாளத்தை கடக்க முயன்ற இருவா் ரயில் மோதி உயிாிழந்தனா்.
Samayam Tamil Train Footboard


இன்று காலை சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயில் சேத்துப்பட்டு ரயில் நிலையத்தை அடைந்தது. அங்கிருந்து ரயில் புறப்பட்ட நிலையில் சேத்துப்பட்டு ரயில் நிலையம் அருகே இருவா் தண்டவாளத்தை கடக்க முற்பட்டுள்ளனா். அவா்கள் மீது ரயில் வேகமாக மோதிய நிலையில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிாிழந்தனா்.

இதனைத் தொடா்ந்து நடைபெற்ற விசாரணையில் இருவரும் சாஸ்திரி நகரைச் சோ்ந்த முனிவேல், கிஷோா் குமாா் என்பது தொிய வந்துள்ளது. பொதுமக்கள் தண்டவாளங்களை கடக்க முடியாத வகையில் தடுப்புச்சுவா்கள் அமைத்தால் மட்டுமே இதுபோன்ற விபத்துகளை தடுக்க முடியும் என்று பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் ரயில் படியில் பயணம் செய்த 5 போ் தடுப்புச்சுவற்றில் மோதி உயிரிழந்த நிலையில் தற்போது ரயில் மோதி 2 போ் உயிாிழந்துள்ள சம்பவம் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி