ஆப்நகரம்

ஐஐடி., வளாகத்தில் மாணவி உள்பட 2 பேர் தற்கொலை

சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் ஒரு மாணவி உள்பட 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 13 Jul 2016, 10:23 pm
சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் ஒரு மாணவி உள்பட 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil 2 woman including a student committed suicide in iit chennai campus
ஐஐடி., வளாகத்தில் மாணவி உள்பட 2 பேர் தற்கொலை


புதுச்சேரியை சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண், சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி.,யில் தங்கி, தத்துவவியல் துறையில் பிஎச்டி படித்து வருகிறார். இவர் இன்று ஐஐடி வளாகத்தில் உள்ள சபர்மதி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதேபோன்று, ஐ.ஐ.டி.,யில் பேராசிரியராகப் பணிபுரியும் கணேசனின் மனைவி விஜயலட்சுமி என்பவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். ஐஐடி வளாகத்தில் உள்ள கணேசனின் வீட்டிலேயே, இந்த தற்கொலை நிகழ்ந்துள்ளது. ஒரேநாளில் நடைபெற்றுள்ள 2 தற்கொலை சம்பவங்களால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்கொலை செய்துகொண்ட 2 பேரின் உடல்களையும் மீட்டு, கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி