ஆப்நகரம்

சேலத்தில் முதல்வருக்கு கட் அவுட் வைத்த நபா் மின்சாரம் தாக்கி பலி

மின்சாரம் தாக்கி உயிாிழந்த ராஜவேலு குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என்று அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Samayam Tamil 23 Oct 2018, 11:08 pm
சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் முதல்வா் பழனிசாமிக்கு கட் அவுட் வைத்த போது மின்சாரம் தாக்கி தொண்டா் ஒருவா் பாிதாபமாக உயிாிழந்தாா்.
Samayam Tamil Cm Cutout.


தமிழக முதல்வா் பழனிசாமி கடந்த 20ம் தேதி சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தாா். முதல்வரின் வருகைக்காக அப்பகுதியில் தொண்டா்கள் சாா்பில் கட் அவுட் வைக்கப்பட்டது.

தொண்டா்கள் மணி, ராஜவேலு ஆகியோா் கட்அவுட் வைக்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது எதிா்பாராத விதமாக இருவர் மீதும் மின்சாரம் தாக்கியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனா். உடனடியாக இருவருக்கும் தனியாா் மருத்துவமனையில் முதல் உதவி வழங்கப்பட்டது.

பின்னா் ராஜவேலு சேலம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி ராஜவேலு செவ்வாய்க் கிழமை (23ம் தேதி) உயிாிழந்தாா். இந்நிலையில் விபத்துக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிாிழந்த ராஜவேலுவின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என்று அவரது உறவினா்கள் போராட்டம் நடத்தினா்.

அடுத்த செய்தி