பெரம்பலூர் மாவட்டத்தில், தண்ணீர் வாளியில் விழுந்த 2 வயது சிறுமி உயிரை விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள எளம்பலூர் அருகே உள்ள தண்ணீர்பந்தல் கிராமத்தில் வசிப்பவர் கோவிந்தன். கல் உடைக்கும் தொழிலாளியான இவரது மனைவி செல்வி. இன்று காலை கோவிந்தன் பால் வாங்க கடைக்கு சென்றுவிட்டார். அவரது மனைவியும் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவர்களின் 2 வயது குழந்தை மோனலிசா, அருகில் இருந்த தண்ணீர் வாளியில் விளையாடிக் கொண்டிருந்தது.
அந்த வாளியில் தண்ணீர் நிரம்ப இருந்துள்ளது. திடீரென, குழந்தை தலைகீழாக, வாளியில் விழுந்துவிட்டது. இதனால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அலறிய குழந்தையை உடனடியாக மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.
ஆனால், அதற்கு முன்பாக, வழியிலேயே சிறுமி மோனலிசா இறந்துவிட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2 year old baby lost life in a bucket of water in Perambalur district.
அங்குள்ள எளம்பலூர் அருகே உள்ள தண்ணீர்பந்தல் கிராமத்தில் வசிப்பவர் கோவிந்தன். கல் உடைக்கும் தொழிலாளியான இவரது மனைவி செல்வி. இன்று காலை கோவிந்தன் பால் வாங்க கடைக்கு சென்றுவிட்டார். அவரது மனைவியும் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவர்களின் 2 வயது குழந்தை மோனலிசா, அருகில் இருந்த தண்ணீர் வாளியில் விளையாடிக் கொண்டிருந்தது.
அந்த வாளியில் தண்ணீர் நிரம்ப இருந்துள்ளது. திடீரென, குழந்தை தலைகீழாக, வாளியில் விழுந்துவிட்டது. இதனால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அலறிய குழந்தையை உடனடியாக மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.
ஆனால், அதற்கு முன்பாக, வழியிலேயே சிறுமி மோனலிசா இறந்துவிட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2 year old baby lost life in a bucket of water in Perambalur district.