ஆப்நகரம்

மதுரையில் பள்ளி பேருந்து விபத்து: 20 மாணவர்கள் படுகாயம்

மதுரை அருகே தனியார் பள்ளி பேருந்து ஒன்று சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த மாணவர்கள் 20 பேரும் ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Samayam Tamil 27 Jan 2020, 4:03 pm
மதுரை: மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்ற பள்ளி பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 20 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
Samayam Tamil விபத்துக்குள்ளான பேருந்து
விபத்துக்குள்ளான பேருந்து


மதுரை மாவட்டம் மேலூர் அருகே தனியார் பள்ளி பேருந்து ஒன்று சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மாணவர்களை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு சென்ற போது அந்த பேருந்து விபத்துக்குள்ளானதாக தெரிகிறது. உடனடியாக அங்கு விரைந்த அப்பகுதி மக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். விபத்து குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பளம் மட்டுமல்ல ‘சரக்கும்’ உண்டு: திருப்பூரில் வினோத விளம்பரம்!

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த மாணவர்கள் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

படுகாயமடைந்த மாணவர்கள் அனைவரும் திருப்புவனம், மேலூரை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

அவ்வளவு தான் தண்ணீர்; மூடப்படுகிறது மேட்டூர் அணை- விவசாயிகள் தேவை பூர்த்தியானதா?

அதேசமயம், பள்ளி பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள திருப்புவனம் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி