ஆப்நகரம்

சாலை விபத்துகள் மரணம்: தமிழ்நாட்டுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் பட்டியலில் நாட்டிலேயே தமிழ்நாடு மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது.

Samayam Tamil 16 Nov 2019, 11:31 am
சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. 2018ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்கள் குறித்த புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது.
Samayam Tamil சாலை விபத்துகள் மரணம்


சாலை விபத்து மரணங்களை தடுப்பதற்காக ஹெல்மட் அணிய வேண்டும், சீட் பெல்ட் அணியவேண்டும் என விழிப்புணர்வு பிரச்சாரங்கள் அரசு சார்பில் முன்னெடுக்கப்பட்டாலும், அதிகமாக அபராதம் விதிக்கப்பட்டாலும் பல நேரங்களில் மக்கள் இதை கடைபிடிக்காத சூழலே உள்ளது. இதனால் சாலை விபத்தில் உயிரிழப்போர்களின் எண்ணிக்கை அதிரிகரித்துவருகிறது.

வாளில்லாமல் கதையை முடித்தேன்: ஸ்மிருதி ராணி யாரைச் சொல்கிறார் தெரியுமா?

2017 ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட 2018ஆம் ஆண்டு 2.4 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 2018ஆம் ஆண்டு மட்டும் சாலை விபத்துகளில் நாடு முழுவதும் ஒரு லட்சத்து 51 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இது முந்தைய ஆண்டைவிட 31 ஆயிரம் அதிகமாகும்.

ராகுலுக்கு எதிராக கிளம்பும் பாஜகவினர்!

நாட்டிலேயே அதிகமாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அதிக சாலை விபத்து மரணங்கள் நிகழ்கின்றன. உத்திரபிரதேசம் மாநிலத்தில் 2018 ஆம் ஆண்டு 22 ஆயிரத்து 256 பேர் சாலை விபத்துகளால் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் 13 ஆயிரத்து 261 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 12 ஆயிரத்து 216 பேர் 2018ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். ஆனால் 2017 ஆம் ஆண்டைவிட தமிழ்நாட்டில் சாலை விபத்துகளில் பலியானவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. அந்த ஆண்டு 16 ஆயிரத்து 157 பேர் பலியாகி இருந்தனர்.

இலங்கை அதிபர் தேர்தல்: மன்னாரில் துப்பாக்கிச் சூடு!

ஒட்டுமொத்தமாக 64.4 சதவீதம் பேர் தவறான திசையில் வாகனங்களை இயக்கியதால் விபத்தை சந்தித்து உயிரிழந்துள்ளனர். 29 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியாமல் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 16% பேர் விபத்தின்போது காரில் சீட் பெல்ட் அணியாமல் இருந்ததால் உயிரிழந்துள்ளனர்.

அடுத்த செய்தி