ஆப்நகரம்

2021 சட்டசபை தேர்தலுக்கு ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளரை அறிவித்தார் டிடிவி தினகரன்

தமிழக சட்டபை தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில், திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்காக வேட்பாளரை அறிவித்து டிடிவி தினகரண பரப்புரையை தொடங்கியுள்ளார்.

Samayam Tamil 15 Jul 2018, 2:38 pm
தமிழக சட்டபை தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில், திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்காக வேட்பாளரை அறிவித்து டிடிவி தினகரன் பரப்புரையை தொடங்கியுள்ளார்.
Samayam Tamil 77356-mwgojtpzsp-1518796503
2021 தேர்தலுக்கு ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளரை அறிவித்தார் டிடிவி தினகரன்


அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திண்டுக்கல்லில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

கடந்த ஒன்றரை வருடங்களாக தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவிலேயே ஊழலில் முதலிடம் பெற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று சமீபத்தில் பாஜக தலைவர் அமித் ஷா கூறினார். இதை அவர் சொன்னால் பலரும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

தமிழகத்தில் லோக்பால் எல்லாம் வெறும் கண்துடைப்பாகும். தமிழகத்தில் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சி மலரும். அப்போது லோக்பால் சட்டம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் . அது ஒபிஎஸ், இபிஎஸ்-க்கு எதிராக அமையும் என்று தினகரன் கூறினார்.

ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட வண்ணாங்கோவிலில் கட்சியினர் முன்னிலையில் அவர் பேசினார். தமிழகத்தில் நடைபெற்று வரும் துரோக ஆட்சிக்கு முட்டையின் மூலம் ஆபத்து ஏற்பட்டுள்ளது. விரைவில் தற்போதைய ஆட்சி வீடுக்கு அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் சசிகலாவின் ஆசி பெற்ற மனோகரன் போட்டியிடுவார். நிச்சயம் அவர் வெற்றி பெறுவார் என்று டிடிவி தினகரன் பேசினார். அதை தொடர்ந்து அவர் திண்டுக்கல் புறப்பட்டு சென்றார்.

தமிழகத்தில் அ.தி.மு.க.வின் ஆட்சி முடிய இன்னும் 3 ஆண்டுகள் உள்ள நிலையில் தினகரன் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வேட்பாளர் அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி